பாவமென்று காதலித்தேன்

நீ அழகாய் இருந்து தொலைத்துவிட்டாய்
அதனால் பாவமென்று காதலித்தேன்
என்றோ ஒருநாள்
எவளோ ஒருவளுக்காய்
எழுதித் தொலைத்தேன்!

madhu preetha

நீயாக நான் ஆனேன்

madhu Preethaகண்ணிரீல் கருவானேன் ..
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்..
.. நீயாக நான் ஆனேன்
... நீயாக நான் ஆனேன்

என் தேவதை

தாயையும் விடவும் நல்லவளாய் தேவதை உனைப்பார்த்தேன்
எங்கோ சொல்லும் சாலையிலே உனக்குள் தங்கிவிட்டேன்
எனை யாரெனக்கேட்டால் ஒரு சொல் போதும் நீயென நான்
சொல்வேன்
என் முகவரி கேட்டால் ஒரு வரி போதும் உன் பெயர் நான்
சொல்வேன்
உனை கடவுள் வந்து கேட்டாலும் எதிர்பேன் தரமாட்டேன்
எதிர்ப்பேன் தரமாட்டேன்.


Madhu Preetha

அவளின் கண்

Madhu Preethaபேசவும்
சித்திரவதை செய்யவும்
புன்னகைக்கவும்
அவளின்
கண்களால்
மட்டுமே
முடிகிறது

எனக்கு பிடித்தவை

எனக்கு பிடித்தவை எல்லாம் வெகு தூரம் ...
அன்று நிலா ...
இன்று நீ ..

காதல் ஒரு இனிய விஷம்

உன்னைவிட்டு
விலக முயல்கிறேன்
அலைகளாய்
விடாமல்
உள்ளிழுத்து கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்...


காதல் ஒரு இனிய விஷம்

Madhu Preetha

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்துப் போகக் கூடாது

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்துப் போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்று
எண்ணம் தோன்றக் கூடாது !
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம்
மறைந்துப் போகும் மாயங்கள் !
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும் !
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும் !
யாருக்கில்லைப் போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும் ...........

madhu Preetha

உன்னை பார்த்துக்கொண்டேயிருக்கும்


madhu Preethaஉன்னை பார்த்துக்கொண்டேயிருக்கும்

‪#‎அற்புத_நிமிடங்களில்‬,

அனைத்தும் மறந்து

ஊமையாகிவிடுகிறது என்

உலகம் ......!

Friendship

Madhu Preetha

கடவுளை போலே காதல்

Madhu Preethaஉன்னை போலே யாரும் என்னை
தாண்டி போனால் உன்னை நினைப்பேன்
உந்தன் ஆசை முகம் பார்த்து கிடக்கத்தான்
உயிரை சுமப்பேன் .....
நெருங்கவும் இல்லை விலகவும் இல்லை
நெஞ்சம் செய்யும் தொல்லை காதல் ......
தொடங்கவும் இல்லை முடிவுகளும் இல்லை
கடவுளை போலே காதல் ......

ஏன் பார்த்தேன்

பார்த்த போதெல்லாம் பிரிவு வரும் என்று நினைக்கவில்லை பிரிந்த போது தான் நினைக்கிறேன் ஏன் பார்த்தேன் என்று..

Madhu Preetha

முன்னால் காதலி

 
Madhu Preetha

அன்று அலுலகம் வந்ததிலிருந்து ஒரு மாதிரியாக இருந்தாள் நண்பரின் முன்னால் காதலி.
என்னம்மா ஒரு மாதிரியாக இருக்க.?
உடம்பு சரியில்லையா.? என்றார் நண்பர்.
ஆமாங்க.. வயிற்று வலி என்றாள்.
துடி துடித்து போனார் நண்பர்.
பர்மிஷன் கேட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பு என்றார் .
வேனாம் பெண்டிங் வொர்க் நிறைய இருக்கு முடிச்சிட்டு
போறேன் என்றாள்.
அதெல்லாம் நான் பார்த்துகறேன். நீ வயிற்று வலியால்
கஷ்டபடுவதை
பார்த்துகிட்டு என்னால் பார்த்துகிட்டு இருக்க முடியாது என கூறி விட்டு ஒரு
ஆட்டோவில்
அவளை ஏற்றி விட்டு அவரும்
ஏறினார்.
அவள் அவர் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
உங்களை கட்டிக்க போகிறவள் கொடுத்து வைத்தவள் என்றாள்.
அவர் சிரித்தார்.
அவள் வீடு வந்தது
அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டு விட்டு
இது உணக்கு தலைபிரசவம் உடம்பை பத்திரமாக பார்த்துக்கோ..! என கூறி விட்டு
ஆட்டோவில் ஏறினார் . அவர் மனசு மட்டும் வேண்டி கொண்டது இறைவா.! என் ஏமாற்றத்தின் வலியை அவள் பிரசவத்தின் போது தந்து விடாதே.! என்று.

நீதி: நீ விரும்பியவர் உனக்கு வலி கொடுத்தால் திரும்பி நீ வலியை கொடுக்காதே.. அன்பையே கொடு.

உன்னை நினைத்துக்கொண்டிருக்கும் போது

Madhu Preetha
ஒரு
நேரத்தில்
ஒருவேளைதான் செய்ய முடியும்...

உன்னை
நினைத்துக்கொண்டிருக்கும் போது
என்னை
நினைக்க எப்படி முடியும்..!


உன்னை தவிர என்னுள் நானே இல்லை

Madhu Preetha
இதுவரையில் யார் முகத்தையும்
ரசித்ததும் இல்லை..!
எப்போதும் யார் நினைவிலும்
துவண்டு போனதும் இல்லை..!

இதுவரை யார் பேச்சிலும்
சலனம் கொண்டதும் இல்லை!
நான் நானாகத் தான் இருந்தேன்.
உன்னைக் காணும் வரை..!

என்று என்னுள் வந்தாயோ
அன்றில் இருந்து எத்தனை
மாற்றங்கள் என்னுள்..!

ஒரு பெண்ணிற்க்குள்
இத்தனை சக்தி உண்டா..!
இதுவரை போதும் பெண்ணே
இனி எதையும் மாற்றாதே..!

என்னையே மறந்து தான்
போகிறேன்..!
உன்னை தவிர என்னுள்
நானே இல்லை...!

Love

Madhu Preetha

நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன்

Madhu Preethaஎன்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்
எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றிபோனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றிபோனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என்னுயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான்
ღ நீ மட்டும் நிஜமானால் நான் என்றும் நிழலாவேன ღ

Understanding

Madhu Preetha

Nice Lines

Madhu Preetha

You are My Life

Madhu Preetha

True Love

Madhu Preetha

என் அன்பே

madhu preethaஎன் அன்பே நீ என் புதையல்
நான் மட்டும் காதலித்தேனோ
காதலி நீ என் அன்பின் தங்கம்மோ
என் காதல் விலை மதிப்பில்லையோ
நான் உன்னை தினமும் நினைக்கிறேன்

நான் எங்கிருந்தாலும் உந்தன் நினைவில்
நீயோ என் மனதில் என்றென்றும் வாழ்வாய்
என் அன்பே நீ என் காதலியோ இல்லை வலியோ
என் இதயம் மிக அழகாக உன்னை நேசிக்கிறதே
பிரியும் போது கூட உன் வார்த்தைகள் தெளிவு இல்லை

மனதால் நான் உன்னை காதலிக்கிறேன் நீயோ என் காதலி
நானோ வெறித்தனமாக உன்னை உயிராக நேசிக்கிறேன்
இது வரை அளவில்லாமல் உன்னில் காதலாக இருந்தவன்
எந்தன் இதயத்தில் நீ,மனதில் இருப்பவள் நீ ,என் காதலியும் நீ
காதலில் கூட பிளாக்கா எப்படி முடிந்தது உன்னால் மட்டும்

உன்னை முதல் முதல் நேசித்தேன் என் உயிரே
வாழ் நாள் முழுதும் உன்னை காதலித்து கொண்டே
என் காதல் அதை உன் கரத்தில் காகித வடிவில் தந்தேனே
வாழ்க்கை முழுவதும் நான் உன்னை காதலிக்கிறேனடி
நீ என் காதலி உன்னை காதலித்த பைத்தியம் நானடி

என் இதயத்தில் மிக மிக அழகான காதல் செடி நீயடி
நீ இன்றி நான் எப்படி வாழ்வேனோ சொல்லடி தங்கம்
நாம் பிரியலாம் நம் காதலை எப்படி பிரிக்க முடியும் சொல்
உன்னை நினைக்க தெரிந்த மனது உன்னை மறப்பது எப்படி
நீ என் வாழ்வின் சந்தோசமே எந்தன் வீட்டு ஒளி விளக்கே

நான் வாழும் வரை என் அன்பு மூச்சு காற்றோடு சேர்ந்து
உன்னை வந்தடையும் என் இதயமே என்னிடம் வந்து விடு
என் காதலியே நான் எப்போதும் உன்னை நேசிக்கிறேன் ,
என் இதயத்தில் அன்பாக, மிகவும் அழகாக இருக்கிறாய்
இனிய காதலியே என்னை விட்டு போகாதே மறுபடி வந்துவிடு

உயிரில் நீ ,,,,உணர்வில் நீ

Madhu Preethaஎன் நிலத்தில் நீ
நினைவில் நீ

உயிரில் நீ ,,,,உணர்வில் நீ

எதிரில் நின்று சிரிக்கிறாய்
பொருளில் எல்லாம் உருவாகிறாய்

கண்ணாடி பார்க்கிறேன்
முன்னாடி தெரிகிறாய்

அருகே வந்து அணக்கிறாய்
தூரமாய் சென்று வதைக்கிறாய்

விடை தெரியாத கேள்விகளோடு
வழி தெரியாமல்
காத்துக் கிடக்கிறதடா........

வருவாய் எனும்
சிறு நம்பிக்கையோடு

போய்விட்டாய் என்ற
பெரும் துயர் அழித்து

விழித்திரையில் உன்னை
தொங்க விட்டு.......

கண்ணில்படும்
உருவங்களில் எல்லாம் உன்னை
கண்டுநேசித்து சிரிக்கும்

என் வெட்கம் மறந்த
ஆசைப் பிரியங்கள்


--- என்றும் ன்  நினைவில்

Tell me when will I see you smile again

Tell me when will I see you smile again.. I am missing..


Madhu Preetha

Girl

madhu preetha

என் தேசத்ம்

என்
தேசத்தில்...

சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு
"கஞ்சி" கிடைத்தாலும்...

குழந்தையின் பசி தீர்க்க
"கஞ்சி"
கிடைப்பது இல்லை..!

madhu preetha