வேண்டும் ஒரு நட்பு

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...

ஆழமான நட்பின் வெளிப்பாடு

அமைதியான இரவு..

சில்லேன்ற காற்று..

அலைகளின் தாளம்..

படகு மறைவில் காதல் ஜோடிகள்..

இருவர் மட்டும் வெட்டவெளில்..

அவன் தோளில் அவள் தலை சாய்ந்து

விசும்பி கொண்டு இருக்கிறாள்..

சமுகம் அவர்களை கேலி செய்தது

கள்ள காதல் என்று..

எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணிர்

ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!

source:tamilweb

நட்பு

உறவென்று சொல்லிக்க யாரும் இல்லாவிட்டாலும்
உயிர் என்று சொல்லிக்கொள்ள ஒரு நட்பு இருந்தால்
போதும் உன்னை போல்!

அன்பு

அன்பு என்பது  
கரும்பலகை அல்ல,
எழுதி எழுதி அழிப்பதற்கு...
அது,
கல்வெட்டு போன்றது
என்றும் நிலைத்திருக்கும்...
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பேன்
உன் நினைவுகளை...

உண்மையான "நட்பு"

காதல் என்பது நேசிப்பது
நட்பு என்பது சுவாசிப்பது

my dear friends..........................

அழகு இருந்தால் வருவேன் என்றது "காதல்".....

பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்".....

எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது................."நட்பு"


........இதுவே உண்மையான் "நட்பு"......

பூக்கள் என்பது
உதிரும் வரை
இரவு என்பது
விடியும் வரை
உறவு என்பது
பேசும் வரை
பிரிவு என்பது
இணையும் வரை
நட்பு என்பது



In case you're interested in knowing more info on air conditioner repair, stop by www.oc24hours.com

உயிர் நண்பன்

விரசமில்லாமல் நாம்
விரல் கோர்த்து நடந்ததுண்டு.

உனக்காக நானும்,
எனக்காக நீயும்
எத்தனையோ முறை
இறைவனை தொழுததுண்டு.

சேர்ந்து சிரிப்பது மட்டுமல்ல
சேர்ந்து அழுவதும் நட்பு தான்
என எனக்குணர்த்திய

தோழியே!!!
நீ
ஆணாக மாறிவிடு,
சமுதாயத்தின் சந்தேகப்
பார்வையில் இருந்து
நாம் விடுபடலாம்.

உன் கோவமும் அன்பும்

உன் கோவம்
உன்னை நேசிப்பவர்களை
யோசிக்க வைக்கும்...
ஆனால்,
உன் அன்பு,
உன்னை வெறுப்பவர்களையும்
நேசிக்க வைக்கும்...

இதயத்தில் என் நண்பன்/தோழி நீ

வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

Natpu Kavithai

Un Natpu ennum sirayil sikki konden, Thavarugal seithaal thandithu vidu Aanal viduthalai mattum seithu vidathe. 

விழித்துக்கொண்டிருக்கிறேன் நான் !

எனது இரவுகளுக்கு சிறகுக்குள் முளைத்து
பல நாட்கள் ஆகிவிட்டன !

ஆனாலும் அவை இதுநாள்வரை
பறக்க முயற்சித்ததில்லை !

உந்தன் அறிமுகத்திற்கு பிறகோ அவை
பறப்பதை நிறுத்தவே இல்லை !

இப்பொழுதும்கூட அவைஎன் உறக்கத்தை
திருடிக்கொண்டு வந்து உன்னிடம்
கொடுத்துக்கொண்டிருக்கிறது பார் !

எனக்கும் சேர்த்து நீயாவது தூங்கு…
உனக்கும் சேர்த்து விழித்துக்கொண்டிருக்கிறேன் நான் !

இதயத்தை பாதிப்பதில்

ஒவ்வொரு முறை அலைப்பேசி
அழைக்கும் பொழுதும் உன்
குரலை எண்ணியே செவியில்
வைக்கிறேன் ஏமாற்றம் தான்.
யாரேனும் என்னிடம்
அலைபேசியில் பேசும் பொழுது
கூட ஒருவேளை
இந்த நொடி நீ என் அலை பேசிக்கு
தொடர்பு கொள்ள முயற்சித்தால்…
என்று உன்னையே நினைத்து
வேறு யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறேன்
அவர்கள் சிக்கிரம் வைக்க வேண்டும்
என்று வேண்டிக் கொண்டே…
அலைப் பேசியை எங்கேனும்
வைத்துவிட்டு செல்ல கூட
பயமாக இருக்கிறது
குளிக்கும் பொழுதும்,இன்னும்
சில வேளைகளிலும் உன் அழைப்பு
வநது விட கூடாது என்று
வேண்டிக்கொள்கிறேன்
வேறு யாரேனும் எடுத்து விட்டால்…?
இருப்பினும் அப்படி ஒரு முறையும்
நிகழவில்லை.ஒவ்வொரு நொடியும்
இப்படி என்னை அலைபேசி நோக்கியே
சிந்திக்க வைத்த உன்
அந்த முதல் அலைப்பேசி அழைப்பு நிகழாமலே
இருந்திருக்கலாம் என்னசெய்வது
நிகழ்ந்து விட்ட அந்த அழைப்பை
நோக்கியே மனம் மீண்டும் மீண்டும்
நிகழாதா? என்று நிகழாத அழைப்பிற்காக துடிக்கிறது
என் துடிப்பு உனக்கும் புரியவில்லை
இந்த அலைபேசிக்கும் புரியவில்லை
உன் குரலை தவிர மற்ற
எல்லோர் குரலையும்
என் காதில் ஒலிக்கச் செய்கிறது
தூக்கி எரிந்து விடவும் மனசில்லை
உன் நினைவுகளை போல…
இரண்டையும் சுமக்கிறேன்
என்நெஞ்சிற்கு அருகில் வைத்து
இரண்டிற்கும் இதயத்தை
பாதிக்கும் சக்தி அதிகமாம்!
என்றாவது ஒரு நாள் உன் குரல்
ஒலிக்கும் பொழுது தெரியும்
எதற்கு சக்தி அதிகம் என்று…?
இதயத்தை பாதிப்பதில்…

குழந்தைத் தனம் தான் நட்பா?

கொஞ்ச நேரமே பார்க்க நேர்ந்தாலும்
அந்த அரிதான நொடிகளை
மனம் அழகாய் ரசிக்கப் பழகிவிட்டது
சந்திப்புகளில் மட்டுமே திருப்தியடைந்த
மனம் இப்பொழுதெல்லாம்
சந்திப்பில்லாத கணங்களிலும்
நட்பால் திருப்தியடைகிறது
பார்த்து பார்த்து பழகிய வயது
போய் ,பார்வைகளின்றியும்
நட்பின் பகிர்தலை உணர்த்தும்
உனதான என் நட்பில்…
கொஞ்சம் பக்குவம் தெரிந்தாலும்
அழும் குழந்தையாகவே என் மனம்
கேட்கிறது.
இப்பொழுதும்
திரும்பவும் சந்திக்கும் தருணங்களை…
இது நட்பின் குழந்தைதனமா?
இல்லை
குழந்தைத் தனம் தான் நட்பா?